செப்டம்பர் 10  - உலக தற்கொலை தடுப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 10  - உலக தற்கொலை தடுப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்கொலை என்பது தடுக்கக் கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும்.

உலக தற்கொலை தடுப்பு தினம்  முதன்முதலாக 2003-ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்ப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர்.இதன் பொருள் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிடுகின்றனர் எனபதுதான். அந்த துயரத்தை குறைக்க , தற்கொலை என்பது தடுக்க கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்க வேண்டும்.]

'இணைந்திரு, தொடர்பு கொள் , பாதுகாப்பு' என்பதே 2016-ஆம் ஆண்டு தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com